அரசு நலத்திட்ட பணிகளை தொடங்கிவைத்த அமைச்சர் செங்கோட்டையன்
Oct 26, 2020, 17:38 IST1603714104000
ஈரோடு
ஈரோடு மாவட்டம், கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.43.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்து, 67 பயனாளிகளுக்கு ரூ.84.24 லட்சம் மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஜெயலலிதா வழியில் நடைபெறும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிப் பணிகள் இந்திய நாடே வியக்கத்தக்க அளவிற்கு அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாத்துக்கொள்ள
அரசு மேற்கொண்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தியதற்கு பிரதமர், முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.