மிலாடிநபியை முன்னிட்டு அக்.30-ல் மதுக்கடைகள் மூடல் – ஆட்சியர் அறிவிப்பு

 

மிலாடிநபியை முன்னிட்டு அக்.30-ல் மதுக்கடைகள் மூடல் – ஆட்சியர் அறிவிப்பு

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் வரும் 30ஆம் தேதி மிலாடிநபி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் கதிரவன்

மிலாடிநபியை முன்னிட்டு அக்.30-ல் மதுக்கடைகள் மூடல் – ஆட்சியர் அறிவிப்பு

அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அன்றைய தினம் மதுபான விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில்
உள்ள பார்களும் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினத்தில் அரசின் உத்தரவை மீறி மதுவிற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.