மலிவுவிலை வெங்காய விற்பனையை துவங்கிவைத்த கே.சி.கருப்பணன்

 

மலிவுவிலை வெங்காய விற்பனையை துவங்கிவைத்த கே.சி.கருப்பணன்

ஈரோடு

ஈரோடு மாவட்டம் பவானி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பொதுமக்களுக்கு மலிவு விலையில் வெங்காயம் விற்பனை இன்று தொடங்கியது. இதனையொட்டி, பவானியில் நடந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு, வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனையை துவங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ்,
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.