தனியார் மருத்துவமனை பணியாளர்களின் விவரங்கள் சேகரிப்பு துவக்கம்
Oct 23, 2020, 17:42 IST1603455122000
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன் உள்ளிட்டோரின் விவரங்களை சேகரிக்கும் பணி இன்று தொடங்கியது. கொரோனா தடுப்பு
பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதுதொடர்பாக, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிவோரின் தகவல்களை சேகரித்து அனுப்ப சுகாதாரத்துறைக்கு அரசு உத்தரவிட்ட நிலையில், ஈரோடு மாவட்ட
சுகாதாரத்துறையினர் விவரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளனர். இதன்படி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்டோரின் விபரங்களை சேகரிக்கும் போது, வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ரேஷன் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.