பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
Nov 2, 2020, 10:33 IST1604293421000
ஈரோடு
ஈரோட்டில் பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைதுசெய்தனர். ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி தொட்டிப்பாளைம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சீட்டாட்டம் விளையாடியவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் அதேபகுதியை சேர்ந்த திருமூர்த்தி(47), விஸ்வநாதன்(43), சுந்தரராஜன்(40), முருகேசன்(37), மற்றும் தங்கராஜ்(30) என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைதுசெய்து, அவர்களிடம் இருந்து ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.