ஈரோடு- உயர் அதிகாரி மீது, பெண் எஸ்.ஐ-க்கள் பரபரப்பு பாலியல் புகார்

 

ஈரோடு- உயர் அதிகாரி மீது, பெண் எஸ்.ஐ-க்கள் பரபரப்பு பாலியல் புகார்

ஈரோடு

ஈரோட்டில் காவல்துறை உயர் அதிகாரி மீது தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் பெண் உதவி ஆய்வாளர்கள் பாலியல் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்தில உயர் அதிகாரி ஒருவர், தனக்கு கீழ் பணியாற்றும் பெண் உதவி ஆய்வாளர்கள் சிலரிடம் பாலியல் ரீதியாக

ஈரோடு- உயர் அதிகாரி மீது, பெண் எஸ்.ஐ-க்கள் பரபரப்பு பாலியல் புகார்

ஆபாசமாக பேசியும், சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் வாய்மொழியாக, மாவட்ட எஸ்.பி. தங்கதுரையிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, புகார் தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் வன்கொடுமை பாதுகாப்பு பிரிவு

ஈரோடு- உயர் அதிகாரி மீது, பெண் எஸ்.ஐ-க்கள் பரபரப்பு பாலியல் புகார்

ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி தலைமையில் தனி குழு அமைத்து விசாரித்து அறிக்கை தர உத்தரவிட்டார். இந்த விசாரணை குழுவில் பெண் ஆய்வாளர், தன்னார்வலர் ஒருவர் உள்பட 4 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த குழுவினர் புகார் கூறிய பெண் எஸ்.ஐ-களிடம் இன்று விசாரணை நடத்த உள்ளனர். விசாரணை குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.