ஈரோடு மாவட்ட காவல் நிலையங்களுக்கு, லேப்டாப்கள் வழங்கிய எஸ்.பி. தங்கதுரை!

 

ஈரோடு மாவட்ட காவல் நிலையங்களுக்கு, லேப்டாப்கள் வழங்கிய எஸ்.பி. தங்கதுரை!

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் வழக்குகள் மற்றும் கோப்புகளை எளிதாக கையாளும் விதமாக 24 காவல் நிலையங்களுக்கு மாவட்ட எஸ்.பி., தங்கதுரை வழங்கினார்.

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள், குழந்தைகள் பாதிப்புக்குள்ளான வழக்குகளை விரைவாக விசாரணை நடத்திட, கடந்த வாரம் போலீசாருக்கு 24 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட காவல் நிலையங்களுக்கு, லேப்டாப்கள் வழங்கிய எஸ்.பி. தங்கதுரை!

இதை தொடர்ந்து, வழக்கின் விசாரணைகளையும், கோப்புகளையும் எளிதாக கையாளுவதற்கு ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் லேப்டாப் வழங்கப்பட்டு உள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்திற்கு 24 லேப்டாப் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனையொட்டி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, அனைத்து மகளிர் காவல் நிலையம் உட்பட 24 காவல் நிலையங்களின் ஆய்வாளர்களிடம் லேப்டாப்புகளை வழங்கினார்.