ஈரோட்டில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு
Nov 17, 2020, 23:21 IST1605635486000
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா வைரசால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 662 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் தொடர் நடவடிக்கையின் காரணமாக கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு 65-க்கும் குறைவாக பதிவாகி உள்ளது.
இதேபோல், இன்று நோய் தொற்றில் இருந்து 108 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.இதனால், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும்580 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளனர்.