கொரோனா விதிமீறல் – ஈரோட்டில் 5 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

 

கொரோனா விதிமீறல் – ஈரோட்டில் 5 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

ஈரோடு

ஈரோட்டில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக நேற்று 5 கடைகளை பூட்டி சீல்வைத்த மாநகராட்சி அதிகாரிகள், முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.

ஈரோடு மாநகர் பகுதிகளில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, மாநகராட்சி சார்பில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.

கொரோனா விதிமீறல் – ஈரோட்டில் 5 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

இதேபோல், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் அந்தந்த உதவி ஆணையர்கள் தலைமையில், அதிகாரிகள் குழுவினர் கடைகள், வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு செய்து, விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதித்தும், கடைகளை பூட்டி சீல் வைத்தும் வருகின்றனர்.

அதன்படி, நேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத கறிக்கடை, டீ கடை என 5 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள், அந்த 5 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.

கொரோனா விதிமீறல் – ஈரோட்டில் 5 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

இதேபோல், முகக் கவசத்தை முறையாக அணியாததாக 50 நபர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதனிடையே, தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் தேவை இன்றி வெளியே சுற்றாமல் வீட்டில் இருக்குமாறு, மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.