மீண்டும் 100-ஐ கடந்த கொரோனா பாதிப்பு

 

மீண்டும் 100-ஐ கடந்த கொரோனா பாதிப்பு

ஈரோடு

ஈரோட்டில் மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, நேற்று மீண்டும் 100-ஐ கடந்தது. இதுதொடர்பாக, சுகாதார துறையினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்டத்தில் நேற்று மேலும் 108 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதிசெயப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 119 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிகை 916 ஆக

மீண்டும் 100-ஐ கடந்த கொரோனா பாதிப்பு

குறைந்துள்ளது. நேற்று 47 வயது பெண் மற்றும் 78 வயது மூதாட்டி ஆகியோர் உயிரிழந்த நிலையில், மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பாதித்த 28 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 20 பேருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலருக்கு நோய் பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ள நிலையில், இன்னும் சிலருக்கு முடிவு வரவேண்டி உள்ளது.