தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்க கோரி பொதுமக்கள் போராட்டம்!

 

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்க கோரி பொதுமக்கள் போராட்டம்!

ஈரோடு

ஈரோடு சூரம்பட்டியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யக்கோரி அப்பகுதி மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாநகர் பகுதிக்குட்பட்ட சூரம்பட்டி பாரதி புரத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு வசிக்கும் 10 நபர்களுக்கு கடந்த 3 நாடகளுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அப்பகுதி மக்கள் வெளியே செல்லாக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், வெளிநபர்கள் உள்ளே வரமுடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்க கோரி பொதுமக்கள் போராட்டம்!

இதனால் பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்கும் வாகனங்கள் அந்த தெருவிற்கு உள்ளே வர முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மிகவும் சிரமப்பட்டு வருவதாகக் கூறி அந்த பகுதி மக்கள் நேற்று, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததன் பேரில், அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது