பேரிடர் கால மேலாண்மை குறித்து, வருவாய் துறையினருக்கு ஆலோசனை

 

பேரிடர் கால மேலாண்மை குறித்து, வருவாய் துறையினருக்கு ஆலோசனை

ஈரோடு

ஈரோடு மாவட்டம் கோபியில் மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தேசிய பேரிடர் மீட்பு குழு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோபிச்செட்டிப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த

பேரிடர் கால மேலாண்மை குறித்து, வருவாய் துறையினருக்கு ஆலோசனை

கூட்டத்தில், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டு, வருவாய்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். மேலும், கோபி தீயணைப்பு துறை வீரர்களுடன் இணைந்து, பேரிடர் கால முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து செயல்

பேரிடர் கால மேலாண்மை குறித்து, வருவாய் துறையினருக்கு ஆலோசனை

விளக்கமும் அளிக்கப்பட்டது. முன்னதாக, இந்த ஆலோசனை கூட்டத்தில் கோபி வட்டாட்சியர், தீயணைப்புத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, கொரோனா குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.