ஈரோடு- அத்தனை பேர் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட கலெக்டர் கதிரவன்! அதிர்ந்த கருக்கு பாளையம் மக்கள்

 

ஈரோடு- அத்தனை பேர் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட கலெக்டர் கதிரவன்! அதிர்ந்த கருக்கு பாளையம் மக்கள்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்று வந்தது. இதற்காக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்களது கோரிக்கைகளை கலெக்டரை சந்தித்து மனுவாக கொடுத்து வந்தனர்.

ஈரோடு- அத்தனை பேர் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட கலெக்டர் கதிரவன்! அதிர்ந்த கருக்கு பாளையம் மக்கள்

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் கலெக்டரை நேரடியாக சந்தித்து மனு கொடுக்க விதிக்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. அதில் தங்களது மனுக்களை போட்டு விட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் . மாஸ்க் அணிந்து வரவேண்டும் . முதியவர்கள், குழந்தைகள் வர அனுமதி இல்லை போன்ற வழிமுறைகள் வைக்கப்பட்டு இருந்தது. இதன்படி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் புகார் பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் பொதுமக்கள் சிலர் தங்களது கோரிக்கைகளை மனுவாக புகார் பெட்டியில் போட்டு விட்டு சென்றனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கருக்கு பாளையம் பொன்னாங்காடு காலனி பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கோரியும் அடிப்படை வசதி செய்ய கோரியும் மனு கொடுக்க வந்தனர்.

ஈரோடு- அத்தனை பேர் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட கலெக்டர் கதிரவன்! அதிர்ந்த கருக்கு பாளையம் மக்கள்

இந்த மக்கள் முக கவசம் , சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. மேலும் முதியவர்களும் நின்று கொண்டிருந்தனர். அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழக மாநில செயலாளர் சின்னசாமி தலைமையில் இந்த மக்கள் வந்திருந்தனர். அப்போது கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலத்திற்கு காரில் கலெக்டர் கதிரவன் வந்து கொண்டிருந்தார். அப்போது நுழைவாயில் அருகே இந்த மக்கள் முக கவசம் சமூக இடைவெளி பின்பற்றாமல் நின்று கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக காரை நிறுத்தி கீழே இறங்கி வந்த கதிரவன், பொதுமக்களிடம் எதற்காக வந்துள்ளீர்கள் என்று கேட்டு அறிந்து, முகக் கவசங்கள் வராமல் இருப்பதும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பதும் தவறு . தற்போது நோய் தொற்று அதிகமாக பரவி வரும் சூழ்நிலையில் இவ்வாறு வந்திருப்பது தவறு என்று எச்சரித்து அறிவுரை கூறினார்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை அழைத்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.