ஈரோடு- செல்போன் கடை பூட்டை உடைத்து கொள்ளை- மர்ம நபர்கள் கை வரிசை!

 

ஈரோடு- செல்போன் கடை பூட்டை உடைத்து கொள்ளை- மர்ம நபர்கள் கை வரிசை!

ஈரோடு

ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு- செல்போன் கடை பூட்டை உடைத்து கொள்ளை- மர்ம நபர்கள் கை வரிசை!

ஈரோடு அருகே உள்ள, பெரிய விலசு, நால் ரோட்டை சேர்ந்தவர் முகமது ஷேக் பரீத் (36). இவர் அதே பகுதியில் செல்போன், செல்போன் உதிரிபாகங்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.
வழக்கம்போல நேற்று கடையை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், மறுநாள் வந்து கடையை திறந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு,

ஈரோடு- செல்போன் கடை பூட்டை உடைத்து கொள்ளை- மர்ம நபர்கள் கை வரிசை!

கடைக்குள் செல்போன்கள்,கை கடிகாரம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தை நோட்டமிட்ட மர்ம நபர் கடையின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது.