ஈரோடு- தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை

 

ஈரோடு- தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை

ஈரோடு

ஈரோடு அருகே சென்ட்ரிங் மெட்டீரியல் வாகைக்கு விடும் தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு நொசிகட்டுவலசு வள்ளிகார்டன் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (60). இவரது மனைவி அம்சவள்ளி.

ஈரோடு- தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை

பரமசிவம் சென்ட்ரிங் மெட்ரியல் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, தம்பதியினர் இருவரும்
வீட்டு மாடியில் உள்ள அறையில் தூங்கியபோது, மர்மநபர்கள் நள்ளிரவில் கீழ்வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 15 சவரன் நகைகள் மற்றும் 1
லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான ரொக்கப் பணத்தை திருடி சென்றனர்.

ஈரோடு- தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை

காலையில் எழுந்தபோது வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடுபோனதை அறிந்து அதிர்ச்சியடைந்த பரமசிவம், இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.