‘நாளைக்கு தடுப்பூசி போட்டா… தங்க நாணயம், வெள்ளி விளக்கு பரிசு’ – அசத்தல் அறிவிப்பு இதோ!

 

‘நாளைக்கு தடுப்பூசி போட்டா… தங்க நாணயம், வெள்ளி விளக்கு பரிசு’ – அசத்தல் அறிவிப்பு இதோ!

கொரோனோ தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும் என பவானி வட்டாட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 40 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உயிர்காக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளுமாறு மக்களை அறிவுறுத்தி வருகிறார்கள்.

‘நாளைக்கு தடுப்பூசி போட்டா… தங்க நாணயம், வெள்ளி விளக்கு பரிசு’ – அசத்தல் அறிவிப்பு இதோ!

சில இடங்களில் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. கோவில்பட்டியில் மொத்தம் 33 மையங்களில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தடுப்பூசி போடும் 108 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து 3 பேருக்கு தங்கக் காசு, 5 பேருக்கு ஹெட்செட், 50 பேருக்கு சேலை, 30 பேருக்கு ஹாட் பாக்ஸ் வழங்கப்படும் என நகராட்சி ஆணையர் அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் பவானியிலும் தடுப்பூசி செலுத்தும் நபர்களுக்கு குலுக்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தங்க நாணயம், வெள்ளி விளக்கு, வேஷ்டி, சேலை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும் என வட்டாட்சியர் அறிவித்துள்ளார்.