ஆயுத பூஜை – முக்கிய கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

 

ஆயுத பூஜை – முக்கிய கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ஈரோடு

ஆயுத பூஜையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் இன்று கடைவீதிகளில் பூஜை பொருட்களை வாங்க, மக்கள் கூட்டம் அலைமோதியது. நாளை ஆயுதபூஜை கொண்டாடப்படுவதை ஒட்டி, அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்து, பூஜை செய்து வழிபாடு நடத்தப்படும்.

ஆயுத பூஜை – முக்கிய கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

இதற்காக, ஈரோட்டில் பூஜை பொருட்களை விற்பனை செய்வதற்காக, ஆர்.கே.வி ரோடு, நேதாஜி தினசரி மார்க்கெட், சின்ன மார்க்கெட், மணிக்கூண்டு, பெரியமாரியம்மன் கோவில் பஸ்ஸ்டாப் உள்ளிட்ட இடங்களில்

ஆயுத பூஜை – முக்கிய கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சாலையோரங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு பொரி, தேங்காய், வாழைப்பழம், பழங்கள், பூ, வாழைக்கன்று, பூசணிக்காய் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இதனை வாங்க ஈரோடு கடை

ஆயுத பூஜை – முக்கிய கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

வீதிகளில் இன்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், பொருட்களை வாங்கும் பொதுமக்கள் வாகனங்கள் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தியிருந்ததால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.