ஈரோடு- அண்ணா பிறந்த நாள்: 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க கோரும் மமக

 

ஈரோடு- அண்ணா பிறந்த நாள்: 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க கோரும் மமக

அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு பத்தாண்டுகளுக்கு மேல் உள்ள சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழர்கள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்யக்கோரி ஈரோட்டில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் எ . சித்திக் தலைமையில் இன்று ஈரோடு வீரப்பன் சந்திரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு- அண்ணா பிறந்த நாள்: 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க கோரும் மமக

வரும் 15ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்த தினம். அதை முன்னிட்டு, முன்னிட்டு பத்தாண்டுகளுக்கு மேல் உள்ள சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழர்கள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்யக்கோரி ஈரோட்டில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் எ . சித்திக் தலைமையில் இன்று ஈரோடு வீரப்பன் சந்திரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு- அண்ணா பிறந்த நாள்: 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க கோரும் மமக

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏழு தமிழர்கள் மற்றும் பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் முஸ்லிம்களுடைய அனைத்து சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் தமுமுக மாவட்ட செயலாளர் முகமது லரீப், தமுமுக மாவட்ட பொருளாளர் பஜ்லுல் ஹக் தமுமுக மாநில செயலாளர் சாகுல் ஹமீத் திராவிட கழக மாவட்ட செயலாளர் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் பாஸ்கர் மற்றும் மாநகர , மாவட்ட மாநகர கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் . முடிவில் தமுமு க ம. ம. க மாநகர தலைவர் ஜாகிர் உசேன் நன்றி கூறினார்.