ஈரோடு- காதலன் போன் எடுக்காததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 

ஈரோடு- காதலன் போன் எடுக்காததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

ஈரோடு

காதலன் போனை எடுக்காததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், நிமிசல் என்கிற கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரது மகள் அனுசியா(19). இவர் ஈரோடு கூரபாளையத்தில், தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்துள்ளார். அனுசியா அவரது உறவினர் மகனை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக வேலை இல்லாமல், அனுசியா அவரது சொந்த ஊரில் இருந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம், அனுசியாவின் காதலன் வீட்டிற்கு தெரிந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

ஈரோடு- காதலன் போன் எடுக்காததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

இதற்கிடையில், அனுசியா கடந்த 2 வாரத்திற்கு முன்பு புதுக்கோட்டையில் இருந்து ஈரோட்டிற்கு வந்து வழக்கம்போல் பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இங்கு வந்த பின்னர்,
அவரது காதலனுக்கு போன் செய்தால், அவர் போனை சரிவர எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

ஈரோடு- காதலன் போன் எடுக்காததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

இதனால், மனவேதனை அடைந்த அனுசியா, பனியன் கம்பெனியில் உள்ள அவரது அறையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கிருந்த சக ஊழியர்கள் அனுசியாவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு , அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அனுசியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.