ஈரோடு- காவிரி ஆற்றில் சடலமாக மிதந்தவர் அடையாளம் தெரிந்தது!

 

ஈரோடு- காவிரி ஆற்றில் சடலமாக மிதந்தவர் அடையாளம் தெரிந்தது!

ஈரோடு

ஈரோடு வைராபாளையம் மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே, காவிரி ஆற்றில் சடலமாக மிதந்தவர் அடையாளம் தெரிந்தது.

கடந்த 3 நாட்களுக்கு முன், சுமார் 60வயது மதிக்கத்தக்க நபர், காவிரி ஆற்றில் சடலமாக மிதந்த நிலையில் மீட்கப்பட்டார்.

ஈரோடு- காவிரி ஆற்றில் சடலமாக மிதந்தவர் அடையாளம் தெரிந்தது!

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இறந்தவர் பற்றிய விவரங்கள் தெரிய வந்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர், ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி நீலகண்டன் வீதியை சேர்ந்த நெசவு தொழிலாளி தங்கவேலு(67) என்பது தெரிய வந்தது. அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானி கூடுதுறை ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஈரோடு- காவிரி ஆற்றில் சடலமாக மிதந்தவர் அடையாளம் தெரிந்தது!

தங்கவேலுவின் உடல் தான் வைராபாளையம் காவிரி ஆற்றில் மீட்கப்பட்டது என போலீசார் தெரிவித்தனர். இறந்துபோன தங்கவேலுக்கு அன்னலட்சுமி(60) என்ற மனைவியும், திருமணமான இரு மகள்களும் உள்ளனர்.