ஈரோடு- தேங்காய் மட்டை பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து- திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு

 

ஈரோடு- தேங்காய் மட்டை பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து- திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு

சத்தியமங்கலம் அடுத்த புளிஞ்சூர் சோதனைச்சாவடி அருகே தேங்காய் மட்டை பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் தமிழகம் கர்நாடகம் மாநிலங்களிடையே சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், அடுத்த திம்பம் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலத்திற்கு சரக்கு வாகன போக்குவரத்து 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது.

ஈரோடு- தேங்காய் மட்டை பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து- திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு


தமிழகம் கர்நாடகம் எல்லையில் அமைந்துள்ள புளிஞ்சூர் சோதனைச்சாவடி அடுத்து உள்ள கர்நாடக சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலத்திற்கு சரக்கு ஏற்றிச் செல்லும் லாரி மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் அடிக்கடி விபத்தை சந்திக்கின்றன.

ஈரோடு- தேங்காய் மட்டை பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து- திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு


இந்த நிலையில் இன்று காலை கர்நாடகாவில் இருந்து தேங்காய் மட்டை பாரம் ஏற்றி வந்த லாரி, புளிஞ்சூர் சோதனைசாவடி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலம் இடையே சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
-அமுதினி