ஈரோடு- கை,கால், வாய், மூக்கை கட்டிப்போட்டு ஆடு திருடிய கும்பல்! மூச்சுத்திணறலால் முதியவர் துடிதுடித்து மரணம்

 

ஈரோடு- கை,கால், வாய், மூக்கை கட்டிப்போட்டு ஆடு திருடிய கும்பல்! மூச்சுத்திணறலால் முதியவர் துடிதுடித்து மரணம்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பெருமாள் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் வழக்கம் போலவே அதே பகுதியில் உள்ள மலை கரட்டில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மது அருந்திக் கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் திடீரென்று எழுந்து வந்து முதியவர் முனுசாமியின் கைகால் மற்றும் வாய், மூக்கினையும் சேர்த்து கட்டினார்கள். இதில், முதியவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

ஈரோடு- கை,கால், வாய், மூக்கை கட்டிப்போட்டு ஆடு திருடிய கும்பல்! மூச்சுத்திணறலால் முதியவர் துடிதுடித்து மரணம்

இதையடுத்து ஆடுகளை திருடிக்கொண்டு தப்பியோடி விட்டனர். இச்சம்பவத்தின் தகவலறிந்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்து வந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

ஈரோடு- கை,கால், வாய், மூக்கை கட்டிப்போட்டு ஆடு திருடிய கும்பல்! மூச்சுத்திணறலால் முதியவர் துடிதுடித்து மரணம்

இந்நிலையில் பவானி அடுத்துள்ள சேர்வராயன் பாளையத்தை சேர்ந்த ஜானகிராமன் , சுதாகரன் மற்றும் குமரா பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் சிக்கினார்கள். மூன்று இளைஞர்களையும் தனிப்படை போலீசார்

ஈரோடு- கை,கால், வாய், மூக்கை கட்டிப்போட்டு ஆடு திருடிய கும்பல்! மூச்சுத்திணறலால் முதியவர் துடிதுடித்து மரணம்

கைது செய்து திருடிய ஆட்டையும் தப்பிச்சென்ற வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் குற்றவியல் நீதிபதி முன்பு மூவரையும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.