“சிறப்பாக ஆட்சி செய்கிறார் ஈபிஎஸ்” : துணை முதல்வர் ஓபிஎஸ் பாராட்டு!

 

“சிறப்பாக ஆட்சி செய்கிறார்  ஈபிஎஸ்” : துணை முதல்வர் ஓபிஎஸ் பாராட்டு!

முதல்வர் பழனிசாமி சிறப்பான ஆட்சியை தருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

“சிறப்பாக ஆட்சி செய்கிறார்  ஈபிஎஸ்” : துணை முதல்வர் ஓபிஎஸ் பாராட்டு!

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இதற்கான விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரூ. 14,000 கோடி மதிப்பீட்டில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாகரூ. 6,941 கோடி மதிப்பில் 118.45 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ. 3, 384 கோடியில் காவிரி உபவடி நிலத்தில் நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது

“சிறப்பாக ஆட்சி செய்கிறார்  ஈபிஎஸ்” : துணை முதல்வர் ஓபிஎஸ் பாராட்டு!

இந்நிலையில் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஓபிஎஸ் பேசும் போது , “முதல்வராக பதவி வகித்து வரும் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் முதல்வராக இந்த ஆட்சியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். 100 ஆண்டுகளில் செய்யவேண்டிய திட்டங்களை அம்மாவின் அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்து காட்டியுள்ளது. நதிகளை இணைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். எந்தவிதக் குறையும் சொல்ல முடியாத ஆட்சியால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் ” என்றார்.