ஜனவரி 17-இல் எம்ஜிஆர் சிலைக்கு ஈபிஎஸ் -ஓபிஎஸ் மரியாதை!

 

ஜனவரி 17-இல் எம்ஜிஆர் சிலைக்கு  ஈபிஎஸ் -ஓபிஎஸ் மரியாதை!

எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர்.

ஜனவரி 17-இல் எம்ஜிஆர் சிலைக்கு  ஈபிஎஸ் -ஓபிஎஸ் மரியாதை!

இந்நிலையில் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் அவர்களின் 104 வது பிறந்தநாளை முன்னிட்டு 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவுகளை எப்போதும் நெஞ்சில் சுமந்து உள்ள மாவட்ட ,ஒன்றிய, நகர, பேரூராட்சி ,கிளை, வார்டு, மாநகராட்சி பகுதி வட்ட அளவில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகள் அனைவரும், எம்ஜிஆர் திருவுருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.