கட்சிக்கு களங்கம்; 5 பேர் கட்சியிலிருந்து நீக்கம்- அதிமுக

 

கட்சிக்கு களங்கம்; 5 பேர் கட்சியிலிருந்து நீக்கம்- அதிமுக

அதிமுக மாநில வர்த்தக அணிச் செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஐந்து பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாநில வர்த்தக அணிச் செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஆர் கந்தசாமி உள்ளிட்ட 5 பேர், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து வகை பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிக்கு களங்கம்; 5 பேர் கட்சியிலிருந்து நீக்கம்- அதிமுக

அதிமுகவில் இருந்து இன்று நீக்கப்பட்ட சிந்து ரவிச்சந்திரன், காளியப்பன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.