திடீரென வேட்பாளரை மாற்றி அறிவித்த ஈபிஎஸ்- ஓபிஎஸ்

 

திடீரென வேட்பாளரை மாற்றி அறிவித்த ஈபிஎஸ்- ஓபிஎஸ்

அதிமுக குறிஞ்சிப்பாடி வேட்பாளரை மாற்றம் செய்திருப்பதாக ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமை அறிவித்துள்ளது.திமுக சார்பில் எம் ஆர் கே பன்னீர்செல்வம் போட்டியிடும் அத்தொகுதியில் அதிமுக பழனிசாமி என்பவரை வேட்பாளராக அறிவித்திருந்தது. இப்போது திடீரென அவரை மாற்றி முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் வேட்பாளராக அறிவித்துள்ளது.

திடீரென வேட்பாளரை மாற்றி அறிவித்த ஈபிஎஸ்- ஓபிஎஸ்

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்மநாபபுரம் தொகுதியில் அதிமுக போட்டியிடுகிறது. பத்மநாபபுரம் தொகுதியில் ஜான் தங்கம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குறிஞ்சிப்பாடி தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம் போட்டியிடுவார்” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.