ஒரே நாளில் வெவ்வேறு இடத்தில் ‘அம்மா மினி கிளினிக்கை’ திறந்து வைத்த ஈபிஎஸ் – ஓபிஎஸ்

 

ஒரே நாளில் வெவ்வேறு இடத்தில் ‘அம்மா மினி கிளினிக்கை’ திறந்து வைத்த ஈபிஎஸ் – ஓபிஎஸ்

சேலம் தலைவாசல் ஊராட்சி ஒன்றியம் லத்துவாடியில் மினி கிளினிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

ஒரே நாளில் வெவ்வேறு இடத்தில் ‘அம்மா மினி கிளினிக்கை’ திறந்து வைத்த ஈபிஎஸ் – ஓபிஎஸ்

இல்லதுவாடியில் அம்மா கிளினிக் திறப்பால் கவர்பனை, திட்டசேரி, கிழக்கு ராஜபாளையம் மக்கள் பயனடைவர். சேலம் மாவட்டத்தில் 100 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படவுள்ள நிலையில் முதற்கட்டமாக 34 அம்மா கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேனி மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக் , புதிய அரசு கட்டடங்களையும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.

ஒரே நாளில் வெவ்வேறு இடத்தில் ‘அம்மா மினி கிளினிக்கை’ திறந்து வைத்த ஈபிஎஸ் – ஓபிஎஸ்

இதை தொடர்ந்து சேலத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, இந்தியாவில் கொரோனா இறப்பு விகித‌த்தை குறைத்த மாநிலம் தமிழகம். கேரளா, டெல்லி மாநிலங்களை மேற்கோள் காட்டியவர்கள் இப்போது எங்கே போனார்கள்? தமிழக அரசு மீது திட்டமிட்டே எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன என்று விமர்சித்தார். இன்று அரியலூர், பெரம்பலூரில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது .