பெண் குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் சூட்டிய ஈபிஎஸ்!

 

பெண் குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் சூட்டிய ஈபிஎஸ்!

ஜெயலலிதா இல்லாமல் அதிமுகவும், கருணாநிதி இல்லாமல் திமுகவும் சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அந்த களம் சூடு பிடித்துள்ளாது. தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய இன்னும் 2 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் சூட்டிய ஈபிஎஸ்!

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக வேட்பாளர் ஆர். மணியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பிரச்சாரத்தில் இருந்த ஒருவரது பெண் குழந்தைக்கு பெயர் சுட்டுமாறு முதல்வரிடம் தொண்டர் ஒருவர் கேட்டுக்கொண்டார். தொண்டரின் வேண்டுகோளுக்கிணங்க, பிரச்சார வேனில் இருந்து அந்த பெண் குழந்தையை தூக்கிய முதலமைச்சர் அதனை கொஞ்சிவிட்டு, அதற்கு ஜெயலலிதா என பெயர் சூட்டினார். பெயரை அவர் மைக்கில் உச்சரித்தவுடன் அங்கிருந்த தொண்டர்கள் கைகள் தட்டி ஆரவாரம் செய்தனர்.