எடப்பாடியில் ஈபிஎஸ், போடியில் ஓபிஎஸ் போட்டி!

 

எடப்பாடியில்  ஈபிஎஸ், போடியில் ஓபிஎஸ் போட்டி!

சட்டமன்ற தேர்தலில் சேலம் எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் முதல்வர் பழனிசாமி.

வருகின்ற சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தின் பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்தை மாவட்ட வாரியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் நிலையில், இன்றுமுதல் அதிமுகவின் விருப்பமனு விநியோகம் தொடங்கியுள்ளது.

எடப்பாடியில்  ஈபிஎஸ், போடியில் ஓபிஎஸ் போட்டி!

இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். எடப்பாடியில் போட்டியிட முதல்வரும், போடியில் போட்டியிட துணை முதல்வரும் அதிமுகவில் விருப்ப மனு அளிக்கின்றனர்.

எடப்பாடியில்  ஈபிஎஸ், போடியில் ஓபிஎஸ் போட்டி!

முன்னதாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் . விருப்பமனுவுக்கு தமிழ்நாட்டில் ரூ. 15,000, புதுச்சேரியில் ரூ.5 ஆயிரம், ரூ. 2000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுவை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.