‘ஓபிஎஸ்சை ஆதரித்து’ போடியில் களமிறங்கும் ஈபிஎஸ்!

 

‘ஓபிஎஸ்சை ஆதரித்து’ போடியில் களமிறங்கும் ஈபிஎஸ்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளுங்கட்சியான அதிமுக, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கான பணிகளிலும் தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதிமுக வேட்பாளர்களும் முதல்வர் பழனிசாமியும் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘ஓபிஎஸ்சை ஆதரித்து’ போடியில் களமிறங்கும் ஈபிஎஸ்!

சில தினங்களுக்கு முன்னர், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமியை ஆதரித்து துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அக்கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், பொய்யான வாக்குறுதிகள் எல்லாம் கொடுத்து மக்களை ஏமாற்ற பார்க்கிறார் ஸ்டாலின். பொய்யில் பிறந்து பொய்யிலே வளர்ந்தவர் அவர். திமுக ஒவ்வொரு முறையும் வாக்குறுதி கொடுக்கிறது. அதை நிறைவேற்றுவதில்லை என திமுகவை கடுமையான சாடினார். ஓபிஎஸ்சின் இந்த ஆவேசப் பேச்சு எதிர்கட்சிகளை திரும்பிப் பார்க்க வைத்தது.

‘ஓபிஎஸ்சை ஆதரித்து’ போடியில் களமிறங்கும் ஈபிஎஸ்!

இந்த நிலையில், போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ்சை ஆதரித்து முதல்வர் பழனிசாமி நாளை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டாலே முதல்வர் பழனிசாமி வெளுத்து வாங்குவார். இதில் ஓபிஎஸ்சை ஆதரித்து பிரச்சாரம் என்றால் சொல்லவா வேண்டும்.. என்ன நடக்கப்போகிறது என்பதை பொருந்திருந்த பார்ப்போம்..!