ஈரோட்டில் ஆ.ராசாவை கண்டித்து, அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

 

ஈரோட்டில் ஆ.ராசாவை கண்டித்து, அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

ஈரோடு

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக, திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து, ஈரோட்டில் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, திமுக எம்.பி. ஆ.ராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதை கண்டித்து, தமிழகம் முழுவதும் அதிமுக-வினர் சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோட்டில் ஆ.ராசாவை கண்டித்து, அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், அவரை கைதுசெய்ய வலியுறுத்தியும் போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல், சூரம்பட்டி நான்குரோடு பகுதியில் பகுதிய செயலாளர்கள் கே,சி.பழனிச்சாமி, பெரியார் நகர் மனோகரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்தகொண்டு, ஆ.ராசாவை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.