திருவனந்தபுரம் கடற்கரைக்கு வரத் தடை… முழு ஊரடங்கு காரணமாக உத்தரவு!

 

திருவனந்தபுரம் கடற்கரைக்கு வரத் தடை… முழு ஊரடங்கு காரணமாக உத்தரவு!

திருவனந்தபுரத்தில் முழு ஊரடங்கு உள்ள நிலையில் மக்கள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் கடற்கரைக்கு வரத் தடை… முழு ஊரடங்கு காரணமாக உத்தரவு!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் கொரோனாத் தொற்று பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் மக்கள் சிலர் கடற்கரைக்கு சென்று வருவது தொடர்கிறது. மேலும், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பூந்துறை, புல்லுவிளை போன்ற கடற்கரை பகுதிகளில் கொரோனா சமூகத் தொற்று நிலையை அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் கடற்கரை பகுதிக்கு முழுவதிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் கடற்கரைக்கு வரத் தடை… முழு ஊரடங்கு காரணமாக உத்தரவு!

இதற்கிடையே கொரோனாத் தொற்று தற்போதைக்கு முடிவுக்கு வர வாய்ப்பில்லை என்ற நிலையில் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தை 2021ம் ஆண்டு ஜூலை வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.