எண்ணூரில் துணை ராணுவம் – போலீசார் கொடி அணிவகுப்பு!

 

எண்ணூரில் துணை ராணுவம் – போலீசார் கொடி அணிவகுப்பு!

சென்னை

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை எண்ணூர் பகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று போலீசார் மற்றும் துணை ராணுவம் சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

எண்ணூர் காவல் உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் நடந்த இந்த அணிவகுப்பில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் கலந்து கொண்டனர்.

எண்ணூரில் துணை ராணுவம் – போலீசார் கொடி அணிவகுப்பு!

எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் தொடங்கிய இந்த அணிவகுப்பானது, அன்னை சத்யா நகர், எண்ணூர் பழைய காவல் நிலையம் வழியாக சென்று அசோக் லே லேண்ட் நிறுவனம் அருகில் நிறைவடைந்தது.