வரும் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு!

 

வரும் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகள்  திறப்பு!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் திறப்பு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு மேலாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

வரும் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகள்  திறப்பு!

இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளை திறக்கும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி வகுப்புகள் ஆரம்பித்து தொடங்கி, மே மாதம் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மே 24 ஆம் தேதியும், எழுத்துத் தேர்வு ஜூன் 2 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது.

வரும் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகள்  திறப்பு!

அதேபோல் இறுதியாண்டு மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கி வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவர்களுக்கான செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வு ஏப்ரல் 15, ஏப்ரல் 26 ஆம் தேதி முறையே நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.