பொறியியல் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை!

 

பொறியியல் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை!

தென்காசி

தென்காசி அருகே பொறியியல் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வி.ஏ.வி.நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள் சோபியா. இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக சோபியா சோகத்துடன் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை.

பொறியியல் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை!

இதனால் உறவினர்கள் அவரை தேடி சென்றபோது, அங்குள்ள விவசாய கிணற்றில் சோபியா சடலமாக மிதந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள், தென்காசி தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இருந்து கயிறு மூலம் சோபியாவின் உடலை மீட்டனர்.

பின்னர், பாவூர்சத்திரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.