சத்தியமங்கலத்தில் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை!

 

சத்தியமங்கலத்தில் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை!

ஈரோடு

சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூரை சேர்ந்த விஜயகுமார் என்பவரது மகள் கிருத்திகா (19). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இ.சி.இ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வந்த அவர், கடந்த 15ஆம் தேதி பயிற்சி வகுப்பிற்காக கல்லூரிக்கு வந்திருந்தார்.

சத்தியமங்கலத்தில் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை!

விடுதி அறையில் தங்கியிருந்த மற்ற மாணவிகள் வீட்டிற்கு சென்ற நிலையில், கிருத்திகா மட்டும் தனியே தங்கி இருந்தார். இந்த நிலையில், நேற்று நீண்டநேரம் ஆகியும் கிருத்திகாவின் அறை கதவு திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் விடுதி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, விடுதி நிர்வாகிகள் அறைக் கதவை திறந்து பார்த்தபோது, அவர் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார்.

தகவலின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், தற்கொலை சம்பவம் குறித்து விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.