காதல் திருமணம் செய்ததால் மோதல்… பொறியாளரை கத்தியால் குத்திக்கொன்ற மைத்துனர்…

 

காதல் திருமணம் செய்ததால் மோதல்… பொறியாளரை கத்தியால் குத்திக்கொன்ற மைத்துனர்…

திருச்சி

லால்குடி அருகே தங்கை காதல் திருமணம் செய்ததால் ஏற்பட்ட முன் விரோதத்தில் பொறியாளர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு கிருபன் ராஜ் (27) மற்றும் கிருபா என்ற மகளும் உள்ளனர். சென்னையில் பொறியாளராக பணிபுரிந்து வந்த கிருபன்ராஜூக்கு, திருமணமாகி மனைவி மற்றும் ஆண் குழந்தை உள்ளனர். இதனிடையே, கிருபன்ராஜின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த கவியரசன் என்பவர், கிருபாவை காதலித்து வந்துள்ளார்.

இது கிருபன்ராஜ் மற்றும் அவரது உறவினர்களுக்கு பிடிக்காத நிலையில், கடந்த மாதம் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.தனது பேச்சை மீறி தங்கையை திருமணம் செய்ததால் கிருபன்ராஜூக்கும், கவியரசனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

காதல் திருமணம் செய்ததால் மோதல்… பொறியாளரை கத்தியால் குத்திக்கொன்ற மைத்துனர்…

இந்த நிலையில், சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்திருந்த கிருபன்ராஜ், நேற்று தனது இருசக்கர வானத்தில் சென்றுள்ளார். அப்போது, தனது உறவினர்களுடன் அவரை வழிமறித்து கவியரசன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது, ஏற்பட்ட மோதலில் கவியரசன், கத்தியால் கிரன்பராஜை சரமாரியாக குத்தினார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொணடு சென்றபோது வழியிலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த லால்குடி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.