“பி. டெக் படிச்சது இந்த பலான வேலை செய்யவா?” -இன்ஜினீயரால் இரவு நேரத்தில் இம்சைக்குள்ளான பெண்கள்

 

“பி. டெக் படிச்சது இந்த பலான வேலை செய்யவா?” -இன்ஜினீயரால் இரவு நேரத்தில் இம்சைக்குள்ளான பெண்கள்

ஒரு என்ஜினியர் சமுக ஊடகத்திலிருக்கும் பல பெண்களை ஆபாசமாக சித்தரித்தும்,ஆபாச மெஸேஜ்கள் அனுப்பியும் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்ட்டார் .

“பி. டெக் படிச்சது இந்த பலான வேலை செய்யவா?” -இன்ஜினீயரால் இரவு நேரத்தில் இம்சைக்குள்ளான பெண்கள்

மேற்கு டெல்லியில் ரமேஷ் நகரில் வசிக்கும் அங்கத் சிங் ஒரு பி. டெக் படித்த என்ஜினீயர் ஆவார் .அவர் அங்குள்ள ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார் .இந்நிலையில் அவருக்கு பொழுது போக வில்லையென்றால் ஊடகத்தில் இன்ஸ்டாகிராமில் இருக்கும் பெண்களின் போட்டோக்களை ஸ்கேன் செய்து அதை அந்த பெண்களுக்கு அனுப்பி வைப்பார் .மேலும் அவர்களுக்கு நள்ளிரவில் ஆபாசமான மெஸேஜ்களை அனுப்புவார் .இதனால்  பல குடும்ப பெண்களின் வாழவில் புயல் வீசியது .

அதன் படி ஒரு சீக்கிய பெண் வேறொரு மத வாலிபரை திருமணம் செய்து கொண்டார் .அந்த பெண்ணின் இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் சென்று அவரின் போட்டோக்களை எடுத்து அதை பலவாறு மாற்றி அந்த பெண்ணின் வாட்ஸ் அப்பிற்கு இரவில் அனுப்பியுள்ளார் .மேலும் அவருக்கு பல பலான மெஸேஜ்களையும் அனுப்பி அவரை டார்ச்சர் செய்துள்ளார் .இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணும் வேறு சில பெண்களும் அவர் மீது புகார் கூறினார்கள் .போலீசார் அங்கித் சிங் மீது வழக்கு  பதிவு செய்து, விசாரணையை சைபர் க்ரைம் போலீசின் உதவியுடன் தொடங்கினார்கள் .அப்போது அவரை பற்றி பல திடுக்கிடும் தகவல் வெளியானது .அதன்படி அவர் பல பெண்களை இப்படி டார்ச்சர் செய்துள்ளது கண்டறியப்பட்டது .அதன் பிறகு அவரை  போலீசார் கைது செய்து சிறையிலடைத்தார்கள் .

“பி. டெக் படிச்சது இந்த பலான வேலை செய்யவா?” -இன்ஜினீயரால் இரவு நேரத்தில் இம்சைக்குள்ளான பெண்கள்