காதலித்த மாணவி திடீர் டாட்டா… இன்ஜினீயரின் செயலால் பதறிய பெற்றோர்!

 

காதலித்த மாணவி திடீர் டாட்டா… இன்ஜினீயரின் செயலால் பதறிய பெற்றோர்!

காதலித்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை முகநூலில் ஆபாசமாக பதிவு செய்த இன்ஜினீயரிங் காதலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை அம்பத்தூரை அடுத்த ஒரகடம் காஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன் ( 24). மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த கல்பான (பெயர் மாற்றம்) என்ற கல்லூரி மாணவியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு பேரையும் மாணவியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால், மகாதேவனை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார் கல்பனா.

இதனால், கொந்தளித்த மகாதேவன், “தன்னுடன் மீண்டும் பேசும்படி பலமுறை கல்பனாவை டார்ச்சர் செய்துள்ளார். ஆனால் கல்பானா பேச மறுத்துவிட்டார். இந்த கோபத்தில் கல்பனா பெயரில் முகநூலில் போலியான கணக்கு தொடங்கியுள்ளார் மகாதேவன். அதில், கல்பனாவின் படத்தை ஆபாசமாக பதிவேற்றியதுடன், அவரது செல்போன் எண்ணையும் பதிவு செய்துள்ளார். இதனால் பலர் கல்பனாவுக்கு போன் செய்து பேசியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த கல்பனா இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கல்பனாவின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்ததில், மாணவி கல்பனா பெயரில் போலியாக ஆபாச முகநூல் கணக்கு தொடங்கிய மகாதேவன், அவதூறு பரப்பியது உறுதியானது. இதையடுத்து மகாதேவனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முதலில் காதலித்த கல்லூரி மாணவி, பெற்றோரின் எதிர்ப்பால் காதலை கைவிட்டதால் ஆத்திரம் அடைந்த இன்ஜினீயர், போலி முகநூல் கணக்கு தொடங்கி இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.