ஈ.என்.டி.டாக்டரின் இன்ப லீலைகள் -சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் சில்மிஷம்…

 

ஈ.என்.டி.டாக்டரின் இன்ப லீலைகள் -சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் சில்மிஷம்…

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகந்தபுரத்தில் ஈ என் டி டாக்டராக க்ளினிக் நடத்தி வருபவர் டாக்டர் பிரசாந்த் நாயக்.இவரின் க்ளினிக்கிற்கு செவ்வாயன்று ஒரு பெண் காதுவலிக்கு சிகிச்சையெடுக்க போனார் .அப்போது அவர் அனைத்து நோயாளிகளையும் அனுப்பிவிட்டு தனியாக கடைசியாக அந்த பெண்ணுக்கு சிகிச்சையளித்தார் .அந்த நேரத்தில் அவரின் கிளினிக்கில் இருந்த தொழிலாளியையும் வேறு வேலை விஷயமாக அடுத்த அறைக்கு அனுப்பி விட்டார் .

ஈ.என்.டி.டாக்டரின் இன்ப லீலைகள் -சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் சில்மிஷம்…

அப்போது தனியாக இருந்த அப்பெண்ணிடம் அவர் பாலியல் வன்கொடுமை செய்தாராம் .இதனால் கொதிப்படைந்த அந்த பெண் அங்கிருந்து உடனே வெளியேறிவிட்டார் .வெளியே போன அவர் தன்னுடைய கணவரிடம் இந்த விஷயத்தினை கூறி ,அவரை அந்த க்ளினிக்கிற்கு கூட்டி வந்தார் .அவரின் கணவர் இந்த பாலியல் புகார் தொடர்பாக டாக்டரிடம் கிளினிக்கில் தகராறில் ஈடுபட்டார் .
இந்த கலவரம் பற்றி தகவலறிந்த போலீசார் அந்த க்ளினிக்கிற்கு விரைந்து வந்தனர் .அப்போது டாக்டர் தேவையில்லாமல் அவரின் கணவர் தன்னை பணிசெய்யவிடாமல் கலவரம் செய்வதாக புகாரளித்தார் .இருவரின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

ஈ.என்.டி.டாக்டரின் இன்ப லீலைகள் -சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் சில்மிஷம்…
ஆனால் பெங்களூரிலிருந்து கண்ணூருக்கு குடிபெயர்ந்த அந்த மருத்துவர் மீது பல ஆண்டுகளுக்கு முன்பு, கண்ணூரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கனவே 4 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது