ஈமு கோழி மோசடி வழக்கு – 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை!

 

ஈமு கோழி மோசடி வழக்கு – 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை!

கோவை கிணத்துக்கடவு அடுத்த காமநாயக்கன்பாளையம் பகுதியில் ஜேப்பியார் என்ற ஈமு கோழி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதன் பங்குதாரர்களாக ஜெயக்குமார், பத்மநாபன், ராஜேஸ்வரன் ஆகிய மூவரும் இந்த நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

ஈமு கோழி மோசடி வழக்கு – 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை!

இந்நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி கிடைக்கும் என்று கூறியதால் பொதுமக்கள் சுமார் ஒரு கோடியே 66 லட்சத்தை முதலீடாக செலுத்தியுள்ளனர். இதனால் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் ஜேப்பியார் ஈமு கோழி நிறுவனத்திற்கு முதலீடு வந்து சேர்ந்தது. ஆனால் கூறியபடி வட்டி தொகை கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக பொதுமக்கள் பலர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் அளித்தனர்.

ஈமு கோழி மோசடி வழக்கு – 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை!

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஈமு கோழி நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஜெயக்குமார், ராஜேஸ்வரன் பத்மநாபன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கானது கோவை முதலீட்டாளர் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கில் இன்று அளிக்கப்பட்டது. அதில், ஜெயக்குமார், பத்மநாபன் மற்றும் ராஜேஸ்வரன் ஆகிய மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 56 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் இன்று பத்மநாபன் மற்றும் ராஜேஸ்வரன் ஆகிய இருவருமே மட்டுமே ஆஜரான நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாத ஜெயக்குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.