மகனின் சடலத்தைத் தேடி தினமும் ஆற்றங்கரைக்கு செல்லும் தந்தை; மனதை உருக்கும் சம்பவம்!

 

மகனின் சடலத்தைத் தேடி தினமும் ஆற்றங்கரைக்கு செல்லும் தந்தை; மனதை உருக்கும் சம்பவம்!

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகனின் உடலைத் தேடி ஆற்றங்கரைக்கு செல்லும் தந்தையின் பாசப்போராட்டம் காண்போரை கண் கலங்கச் செய்திருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில் வசித்து வரும் கமல் சிங்(60) என்பவரது மகன் ஹிமான்ஷு கதம்(28). இவர் பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். பணியில் இருந்து வீடு திரும்பாத மகன் உயிரிழந்ததையே, கமல் சிங் செய்தித்தாளில் பார்த்து தான் தெரிந்து கொண்டுள்ளார்.

மகனின் சடலத்தைத் தேடி தினமும் ஆற்றங்கரைக்கு செல்லும் தந்தை; மனதை உருக்கும் சம்பவம்!

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடலை பல நாட்களாக தீயணைப்பு துறையினர் தேடியுள்ளனர். ஆனால் அவரது பைக் மட்டுமே கிடைத்திருக்கிறது, உடல் கிடைக்கவில்லை. இதனால் ஹிமான்ஷுவின் உடலை தேடும் பணியை தீயணைப்புத்துறையினர் கைவிட்டுள்ளனர். இருப்பினும் மகனை சடலமாக கூட பார்க்க முடியாததால் கலங்கிப் போன கமல் சிங், தினமும் மகனின் போட்டோவை வைத்துக் கொண்டு உடல் எங்கேயாவது இருக்கிறதா என ஒவ்வொரு ஆற்றங்கரையாக தேடிக் கொண்டிருக்கிறாராம்.

கமல் சிங்கின் மகள் கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அதற்கு அடுத்த மாதமே மகனும் உயிரிழந்த நிலையில், உடலை கூட பார்க்க முடியாமல் நடைப்பிணமாக சுற்றிக் கொண்டிருக்கிறார் அவர். கமல் சிங்கின் இந்த தேடல் அப்பகுதி மக்களை கண் கலங்கச் செய்துள்ளது.