கிணற்றில் விழுந்த யானையை மீட்க 15 மணிநேரமாக போராடும் மீட்புப் படை!

 

கிணற்றில் விழுந்த யானையை மீட்க 15 மணிநேரமாக போராடும் மீட்புப் படை!

தருமபுரி மாவட்டம் பஞ்சபள்ளி காப்புக்காடு பகுதியில் ஏலகுண்டூர் கிராமத்தில் உணவு தேடி ஊருக்குள் நுழைந்த பெண் யானை, வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான சுமார் 50 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத விவசாய கிணற்றில் விழுந்தது. இன்று காலை விழுந்த யானையை 15 மணிநேரமாக மீட்கும் பணியில் பாலக்கோடு வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கிணற்றில் விழுந்த யானையை மீட்க 15 மணிநேரமாக போராடும் மீட்புப் படை!

கிணற்றில் விழுந்த யானையை கிரேன் மூலம் மீட்பதில் சிக்கல் இருப்பதால், மயக்க ஊசி செலுத்தி மீட்க வனத்துறையினர் திட்டமிட்டனர். மேலும் கிணற்றில் 10 அடி அகலமுள்ள சிமெண்ட் வளைவில் யானை இருப்பதால், கிணற்றின் அருகில் சுமார் 30 அடிக்கு சாய்தளம் அமைத்து மீட்பு பணியை மேற்கொண்டுவருகின்றனர் கிணற்றின் அருகில் பொக்லைன் இயந்திரம் மூலம் சாய் தளம் அமைக்கப்பட்டது. மின் மோட்டர் மூலம் கிணற்றில் தண்ணீரை இரைத்து, யானையின் பசியை போக்க, வனத் துறையினர் தென்னங்கீற்றை வெட்டி, யானைக்கு உணவாக கொடுத்து வருகின்றனர்.

இருள் சுழ்ந்துவிட்ட போதிலும் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானையை மீட்க 15 மணிநேரமாக மீட்புப்படையினர் போராடிவருகின்றனர்.