மசினக்குடி யானை உடல்நலக்குறைவால் இறக்கவில்லை! உயிரோடு கொளுத்திய கொடூரக்காரர்கள்!

 

மசினக்குடி யானை உடல்நலக்குறைவால் இறக்கவில்லை! உயிரோடு கொளுத்திய கொடூரக்காரர்கள்!

நீலகிரியில் உயிருக்கு போராடும் ஒரு ஆண் யானை மீது, சிலர் தீ வைத்து கொளுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளன.

மசினக்குடியில் 40 வயதுடைய யானை ஒன்று முதுகில் காயத்துடன் சுற்றிவந்தது. அதற்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு அந்த யானையின் காது கிழிந்து ரத்தம் வடிந்தது. வலியால் அந்த யானை அலறியது. உடனடியாக அந்த யானையை மீட்ட வனத்துறையினர் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி யானை மயங்கி விழுந்து உயிரிழந்தது.

மசினக்குடி யானை உடல்நலக்குறைவால் இறக்கவில்லை! உயிரோடு கொளுத்திய கொடூரக்காரர்கள்!

யானைக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அதன் காது பகுதியில் யாரோ பெட்ரோல் வைத்து தீ மூட்டி எரித்ததற்கான தடயங்கள் தென்பட்டுள்ளன. யானை மீது ஆசிட் ஊற்றியும் காயப்படுத்தியிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர்.

இந்நிலையில் இரவு நேரத்தில் உயிரிழந்த மசினக்குடி யானை மீது சிலர் தீ வைப்பது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. வீடியோவில் வலி தாங்க முடியாமல் யானை அலறுகிறது. யானை மீது சிலர் எரியும் டயரை தூக்கி எறிந்ததால் அதன் தலை மற்றும் காது பகுதி சேர்த்து எரிந்து காயமாகிவிட்டது. பிளிறி கொண்டே யானை அங்கிருந்து ஓடும் காட்சிகள் காண்போரை கலங்க வைக்கின்றன. யானையை கொளுத்தியது யார் என விசாரணை நடைபெற்றுவருகிறது.