திருப்பரங்குன்றம் கோவில் யானை மிதித்து பாகன் உயிரிழப்பு!
May 24, 2020, 20:34 IST1590332669000
மதுரை திருப்பரங்குன்றம் கோயில் யானை திடீரென மதம் பிடித்து பாகனை மிதித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயில் தெய்வானை என்ற யானையை பாகன் காளிதாசன்,ராஜேஷ் என இருவர் பராமரித்து வந்தனர். இந்நிலையில் கோயில் யானையை குளிக்க வைக்க அழைத்துச் சென்ற போது திடீரென மதம் பிடித்தது. ஆக்ரோஷமான தெய்வானை பாகன் காளிதாஸை தாக்கியது. இதில் அவர் உயிரிழந்தார்.
மற்றொருவரான ராஜேஸ் யானையை கட்டுப்படுத்தி கட்டி வைத்தார். யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புப்படை வீரர்கள் பாகன் காளிதாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.