மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி!

 

மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி!

மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி!

கடந்த சில மாதங்களாக மின்சாரம் தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் தர்மலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். மகாராஜாபுரத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பியுஸ் போட சென்ற போது மின்சாரம் தாக்கி ஊழியர் இறந்துள்ளார். இதையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஊழியர் தர்மலிங்கத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி!

அதேபோல் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் மலைக்கிராமத்தில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தவர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார். உயர் மின் அழுத்த திறன் கொண்ட மின்கம்பிகள் உரசியதில் மின்சாரம் பாய்ந்து ராஜேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.