மின்சாரம் தாக்கி கொத்தனார், மேஸ்திரி உயிரிழப்பு – திருமுல்லைவாயல் பரிதாபம்

 

மின்சாரம் தாக்கி கொத்தனார், மேஸ்திரி உயிரிழப்பு – திருமுல்லைவாயல் பரிதாபம்

சென்னை திருமுல்லைவாயல் சோழன்நகரில் வசித்து வந்தவர் மாடசாமி(62). கொத்தனாரான இவர் தன் வீட்டின் மாடிக்கு செல்ல படிக்கட்டுஅமைக்க ஏற்பாடு செய்தார். இதற்காக செந்தில் நகர் பாரதிதாசன் தெருவில் வசிக்கும் மேஸ்திரி ஜெய்சங்கர்வ(50) என்பவரையும் துணைக்கு வைத்துக்கொண்டு டிரில்லரில் பள்ளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

மின்சாரம் தாக்கி கொத்தனார், மேஸ்திரி உயிரிழப்பு – திருமுல்லைவாயல் பரிதாபம்

இருவரும் டிரில்லரில் பள்ளம் எடுக்கும் போது பூமிக்கு அடியில் சென்ற மின்சார வயரில் டிரில்லர் பட்டு மின்சாரம் தாக்கி வேலை செய்து கொண்டிருந்த மாடசாமி மற்றும் ஜெய்சங்கர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இது சம்மந்தமாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று பிரேதத்தை கைப்பற்றி கே.எம்.சி. மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.