கோவில் குளத்தில் மூழ்கி மின்வாரிய ஊழியர் பலி!

 

கோவில் குளத்தில் மூழ்கி மின்வாரிய ஊழியர் பலி!

தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே கோயில் குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மீளவிட்டான் அந்தோணியார்புரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் கள உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று ரமேஷ் உடன் பணிபுரியும் முருகன் மற்றும் பரமசிவம் ஆகியோருடன் குருமலையில் உள்ள பொய்யாழி அய்யானார் கோவில் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார்.

கோவில் குளத்தில் மூழ்கி மின்வாரிய ஊழியர் பலி!

குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற ரமேஷ், நீரில் மூழ்கி மாயமாகினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முருகன், கோயில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், குளத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக ரமேஷை மீட்டனர்.

தகவல் அறிந்த கொப்பம்பட்டி காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.