மனைவியை கூட்டி சென்ற மாமியார் -தூக்கமின்றி தவித்த கணவன் -என்ன பண்ணாரு தெரியுமா ?

 

மனைவியை கூட்டி சென்ற மாமியார் -தூக்கமின்றி தவித்த கணவன் -என்ன பண்ணாரு தெரியுமா ?


மனைவி பிரிந்து சென்றதால் கோவப்பட்ட கணவன் அவரின் மனைவி மற்றும் மாமியாரை குத்தி கொன்றார்

மனைவியை கூட்டி சென்ற மாமியார் -தூக்கமின்றி தவித்த கணவன் -என்ன பண்ணாரு தெரியுமா ?


ஹைதராபாத்தின் சங்க ரெட்டி மாவட்டமான அன்னாரம் கிராமத்தைச் சேர்ந்த நூன் நரசிம்மர் அங்குள்ள நகராட்சியில் எலெக்ட்ரிஷியனாக பணியாற்றுகிறார் .இவர் ஸ்வரூபா என்ற பெண்ணை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் .இப்போது அந்த தம்பதிகளுக்கு குழந்தைகளும் இருக்கிறார்கள் .அந்த வீட்டில் நரசிம்மரின் தாயாரும் அவர்களோடு வசித்தார் .இதனால் மாமியாருக்கும் மருமகளுக்கும் அடிக்கடி சண்டை வந்தது .அதனால் அந்த பெண் ஸ்வரூபா, அந்த மாமியார் இருக்கும் வீட்டில் தன்னால் வசிக்க முடியாது என்று கூறி சண்டை போட்டார் .அதன் பிறகு அந்த பெண்ணின் தாயார் வந்து ஸ்வரூபாவை
ஐ.டி.ஏ பொல்லாராமில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு கூட்டி சென்று விட்டார் .
இதனால் நரசிம்மர் தனியே குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டு,தூக்கமின்றி தவித்தார் .அதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை,அவர் தன்னுடைய மனைவியை கூட்டி வர தன்னுடைய மாமியார் வீட்டிற்கு சென்றார் .ஆனால் அங்கு அவருக்கும் , அவரின் மாமியார் மற்றும் மனைவிக்குமிடையே வாக்குவாதம் முற்றியது .அதனால் அந்த எலெக்ட்ரிஷியன் கிட்சனுக்குள் இருந்து ஒரு கத்தியை எடுத்து வந்து அவரின் மனைவியையும் , மாமியாரையும் குத்தி கொன்றார் .இந்த தாக்குதலால் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள் .பிறகு அவர் இரண்டு பெண்களையும் கொலை செய்த பின்னர், ஐடிஏ பொல்லராம் காவல் நிலையத்திற்குச் சென்று போலீசார் முன் சரணடைந்தார். அந்த நபர் கொலைசெய்த ஆயுதத்தையும் காவல் நிலையத்தில் சமர்ப்பித்தார். அங்கு குற்றம் சாட்டப்பட்டவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மனைவியை கூட்டி சென்ற மாமியார் -தூக்கமின்றி தவித்த கணவன் -என்ன பண்ணாரு தெரியுமா ?