மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு!

 

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு!

திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள கொடைக்கல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(35). இவர் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது வீட்டில் மின் இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, மின் இணைப்பு வழங்குவதற்காக கம்பியை, மின்கம்பத்தில் கட்ட முயற்சி செய்தார். அப்போது, அவரது உடல் மீது எதிர்பாராத விதமாக அங்கிருந்த உயர் அழுத்த மின்கம்பி உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் கிருஷ்ணமூர்த்தி தூக்கி வீசப்பட்டார்.

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு!

இதில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணமூர்த்தியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த செவ்வாப்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.